சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கச் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னை திரும்புவதால், சிங்கபெருமாள்கோவில் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி வந்ததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. தாம்பரம் மாநகரப் போலீசாரும், போக்குவரத்துப் போலீசாரும் இணைந்து இந்த நெரிசலைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.