தமிழ்நாடு

சென்னையில் இருந்து வாரணாசி, அகமதாபாத்துக்கு நேரடி விமான சேவை : ஏர்-இந்தியா விமான நிறுவனம் அறிவிப்பு

சென்னையில் இருந்து பெங்களூரு, கொல்கத்தா, வாரணாசி, அகமதாபாத் நகரங்களுக்கு புதிய விமான சேவையை ஏர் இந்தியா விமானம் தொடங்குகிறது.

தந்தி டிவி

சென்னையில் இருந்து பெங்களூரு, கொல்கத்தா, வாரணாசி, அகமதாபாத் நகரங்களுக்கு புதிய விமான சேவையை ஏர் இந்தியா விமானம் தொடங்குகிறது. நாள்தோறும் காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் விமானம் 8 மணிக்கு பெங்களூரு சென்றடையும். கட்டணமாக ஆயிரத்து 228 ரூபாய் வசூலிக்கப்படும்.இதேபோல் வரும் 6-ம் தேதியில் இருந்து வாரணாசிக்கு நேரடி விமான சேவை தொடங்குகிறது. செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு ஆகிய 4 நாட்கள் விமானங்கள் இயக்கப்படும். இதேபோல் சென்னை - அகமதாபாத்துக்கு வாரத்தில் 6 நாட்களும், கொல்கத்தாவுக்கு 4 நாட்களும் விமானம் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்