தமிழ்நாடு

மின்மாற்றியில் திடீர் தீ விபத்து : மக்கள் அலறி அடித்து ஓட்டம்

சென்னை திருவொற்றியூரில் மின்மாற்றியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அங்கிருந்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

தந்தி டிவி

சென்னை திருவொற்றியூரில் மின்மாற்றியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அங்கிருந்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். திருவொற்றியூர் எல்லையம்மன்கோவில் அருகே உள்ள மின்மாற்றியில் மின்சாரம் கசிந்து திடீரென வெடித்துள்ளது. இதையடுத்து மின்சாரப்பெட்டியில் தீப்பற்றி எரிந்து, கரும்புகை வெளியேறியுள்ளது. இதனால் டிரான்ஸ்பார்மர் வெடித்து விடுமோ என்கிற அச்சத்தில் மக்கள் அங்கிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அவசர நிலையை உணர்ந்த மெட்ரோ ரயில் ஊழியர்கள், தீயணைப்பான் கொண்டு, தீயை உடனடியாக அணைத்தனர். ஏ.சி மற்றும் குளிர்சாதன பெட்டி அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், உயர் அழுத்தம் ஏற்பட்டு, இதுபோன்ற தீ விபத்துகள் ஏற்படுவதாக மின்துறை சார்ந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு