தமிழ்நாடு

பாதுகாப்பு துறைக்கு சொந்தமான தொழிற்சாலையில் கைவரிசை : 3 பேர் கைது

சென்னை ஆவடியில் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான தொழிற்சாலையில் ஏலம் எடுத்த அளவை விட அதிகமாக, 25 டன்கள் பழைய இரும்பு பொருட்களை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தந்தி டிவி

சென்னை ஆவடியில் உள்ள பாதுகாப்பு துறைக்கு சொந்தமான தொழிற் சாலையில் ஆண்டுக்கு ஒருமுறை பழைய பயன்படாத பொருட்கள் ஏலம் விடப்பட்டு வருகிறது. கடந்த 35 ஆண்டுகளாக காளிமுத்து என்பவர் இந்த பொருட்களை ஏலம் எடுத்து வருகிறார். இந்தாண்டுக்கான ஏலம் நேற்று விடப்பட்ட நிலையில், ராணுவ விஜிலன்ஸ் பிரிவினர் அளித்த தகவலின் பேரில் திருமுல்லைவாயல் போலீசார் அதிரடி மேற்கொண்டனர். இதில், 3 லாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 25 டன்கள் அதிகமாக பொருட்கள் எடுத்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர்கள் அசோக் குமார், தயாளன், அஜித் குமார் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 7 லாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான பொருட்கள் கடத்தியது தெரிய வந்துள்ளதாக கூறப்படு​கிறது. 3 லாரிகள் மட்டுமே பிடிபட்டுள்ள நிலையில், எஞ்சிய நான்கு லாரிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்