தமிழ்நாடு

பாதுகாப்பு துறைக்கு சொந்தமான தொழிற்சாலையில் கைவரிசை : 3 பேர் கைது

சென்னை ஆவடியில் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான தொழிற்சாலையில் ஏலம் எடுத்த அளவை விட அதிகமாக, 25 டன்கள் பழைய இரும்பு பொருட்களை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தந்தி டிவி

சென்னை ஆவடியில் உள்ள பாதுகாப்பு துறைக்கு சொந்தமான தொழிற் சாலையில் ஆண்டுக்கு ஒருமுறை பழைய பயன்படாத பொருட்கள் ஏலம் விடப்பட்டு வருகிறது. கடந்த 35 ஆண்டுகளாக காளிமுத்து என்பவர் இந்த பொருட்களை ஏலம் எடுத்து வருகிறார். இந்தாண்டுக்கான ஏலம் நேற்று விடப்பட்ட நிலையில், ராணுவ விஜிலன்ஸ் பிரிவினர் அளித்த தகவலின் பேரில் திருமுல்லைவாயல் போலீசார் அதிரடி மேற்கொண்டனர். இதில், 3 லாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 25 டன்கள் அதிகமாக பொருட்கள் எடுத்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர்கள் அசோக் குமார், தயாளன், அஜித் குமார் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 7 லாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான பொருட்கள் கடத்தியது தெரிய வந்துள்ளதாக கூறப்படு​கிறது. 3 லாரிகள் மட்டுமே பிடிபட்டுள்ள நிலையில், எஞ்சிய நான்கு லாரிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"