தமிழ்நாடு

வங்கி ஏ.டி.எம்.மில் பணத்தை நிரப்ப வந்த ஓட்டுனர் ரூ. 52 லட்சத்துடன் மாயம்

சென்னை வேளச்சேரியில் வங்கி ஏ.டி.எம்.மில் பணத்தை நிரப்ப வந்த ஓட்டுனர், 52 லட்சம் ரூபாயுடன் தப்பிய ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தந்தி டிவி

சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று, ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பும் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர், ஊழியர் உள்ளிட்டோர் பணத்துடன் காரில் சென்றுள்ளனர். அப்போது, வேளச்சேரியை சேர்ந்த அம்புரோஸ் என்பவர் காரை இயக்கியுள்ளார். வேளச்சேரி விஜயநகரில் உள்ள விஜயா வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்புவதற்காக மேலாளர், ஊழியர், பாதுகாவலர் ஆகியோர் இற​ங்கிச் சென்றுள்ளனர். அப்போது, லாரிக்கு வழிவிடுவதாக கூறி வண்டியை எடுத்த ஓட்டுநர் அம்புரோஸ், 52 லட்சம் ரூபாய் பணத்துடன் மாயமானார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் மூவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது, வேளச்சேரி முகவரியில் ஓட்டுநர் இல்லாதது தெரியவந்தது. வங்கி ஏ.டி.எம்.மில் நிரப்ப வந்தபோது நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"