தமிழ்நாடு

வங்கி ஏ.டி.எம்.மில் பணத்தை நிரப்ப வந்த ஓட்டுனர் ரூ. 52 லட்சத்துடன் மாயம்

சென்னை வேளச்சேரியில் வங்கி ஏ.டி.எம்.மில் பணத்தை நிரப்ப வந்த ஓட்டுனர், 52 லட்சம் ரூபாயுடன் தப்பிய ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தந்தி டிவி

சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று, ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பும் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர், ஊழியர் உள்ளிட்டோர் பணத்துடன் காரில் சென்றுள்ளனர். அப்போது, வேளச்சேரியை சேர்ந்த அம்புரோஸ் என்பவர் காரை இயக்கியுள்ளார். வேளச்சேரி விஜயநகரில் உள்ள விஜயா வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்புவதற்காக மேலாளர், ஊழியர், பாதுகாவலர் ஆகியோர் இற​ங்கிச் சென்றுள்ளனர். அப்போது, லாரிக்கு வழிவிடுவதாக கூறி வண்டியை எடுத்த ஓட்டுநர் அம்புரோஸ், 52 லட்சம் ரூபாய் பணத்துடன் மாயமானார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் மூவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது, வேளச்சேரி முகவரியில் ஓட்டுநர் இல்லாதது தெரியவந்தது. வங்கி ஏ.டி.எம்.மில் நிரப்ப வந்தபோது நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி