தமிழ்நாடு

வங்கி அதிகாரி வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளை

சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் வங்கி அதிகாரி வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

நுங்கம்பாக்கம், காம்தார் நகர், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விஸ்வநாதன். விடுமுறை நாட்களையொட்டி தனது குடும்பத்துடன் விஸ்வநாதன் , வட நெம்மேலியில் உள்ள பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார். வழக்கம்போல் வேலைக்காரப் பெண் வேலை முடிந்தவுடன் வீட்டு சாவியை கீழ்தளத்தில் உள்ள பெட்டியில் வைத்துள்ளார். இந்நிலையில் விஸ்வநாதன் வீடு திரும்பி வந்து பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 70 பவுன் நகை மற்றும் 500 கிராம் வெள்ளி பொருட்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து தகவலறிந்து வந்த நுங்கம்பாக்கம் போலீசார் , அந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்