தமிழ்நாடு

வங்கி அதிகாரி வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளை

சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் வங்கி அதிகாரி வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

நுங்கம்பாக்கம், காம்தார் நகர், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விஸ்வநாதன். விடுமுறை நாட்களையொட்டி தனது குடும்பத்துடன் விஸ்வநாதன் , வட நெம்மேலியில் உள்ள பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார். வழக்கம்போல் வேலைக்காரப் பெண் வேலை முடிந்தவுடன் வீட்டு சாவியை கீழ்தளத்தில் உள்ள பெட்டியில் வைத்துள்ளார். இந்நிலையில் விஸ்வநாதன் வீடு திரும்பி வந்து பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 70 பவுன் நகை மற்றும் 500 கிராம் வெள்ளி பொருட்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து தகவலறிந்து வந்த நுங்கம்பாக்கம் போலீசார் , அந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை