தமிழ்நாடு

"சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படாது" - தமிழக அரசு திட்டவட்டமாக அறிவிப்பு

சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

கொரோனா ஊரடங்கு 3-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நாளை மறுதினம் டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. சமூக இடைவெளி உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளுடன், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடைகள் திறக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை மாநகரில், மதுக்கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுக்கடைகள் திறக்க அனுமதியில்லை என்றும் மறுதேதி அறிவிக்கும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் எனவும் அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்