தமிழ்நாடு

"சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படாது" - தமிழக அரசு திட்டவட்டமாக அறிவிப்பு

சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

கொரோனா ஊரடங்கு 3-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நாளை மறுதினம் டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. சமூக இடைவெளி உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளுடன், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடைகள் திறக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை மாநகரில், மதுக்கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுக்கடைகள் திறக்க அனுமதியில்லை என்றும் மறுதேதி அறிவிக்கும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் எனவும் அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை