தமிழ்நாடு

சென்னையில் டாஸ்மாக் கடைகள் 5 மாதங்களுக்கு பின்னர் நாளை திறப்பு- பீர் பாட்டில்களை அனுப்பும் பணி தீவிரம்

கொரோனோ தொற்று காரணமாக 5 மாதங்களாக சென்னை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது.

தந்தி டிவி

கொரோனோ தொற்று காரணமாக 5 மாதங்களாக சென்னை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் நாளை முதல் சென்னை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கலாம் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் திருமழிசையில் உள்ள டாஸ்மாக் குடோன் இன்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது. இங்கு பலவகையான மதுபாட்டில்கள் வந்து இறங்கிய வண்ணம் உள்ளது. 5 மாதங்களாக கடைகள் மூடப்பட்டு இருந்ததால் காலாவதியான பீர் பாட்டில்கள் ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், சென்னையின் பல்வேறு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு புதிய பீர் பாட்டில்களை

அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை