தமிழ்நாடு

தியாகராயர் நகரில் ரூ. 25 கோடி மதிப்பு நிலம் மீட்பு

சென்னை தியாகராயர் நகரில் ஆக்கிரமிப்பில் இருந்த 25 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மாநகராட்சி நிர்வாகம் மீட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை தியாகராயர் நகரில் ஆக்கிரமிப்பில் இருந்த 25 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மாநகராட்சி நிர்வாகம் மீட்டுள்ளது. தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்கும் பணியில் தீவிரமாகியுள்ள மாநகராட்சி நிர்வாகம், தியாகராயர் நகர் ராமன் தெருவில், ஆக்கிரமிப்பில் இருந்த எட்டரை கிரவுண்ட் நிலத்தை மீட்டுள்ளது. தியாகராயர் நகர் லேடிஸ் கிளப் என்ற பெயரில் 40 வருடங்களுக்கு முன் குத்தகைக்கு எடுத்ததாகவும், ஆனால் குத்தகை காலம் முடிந்து 15 ஆண்டுகள் ஆன போதிலும் மாநகராட்சி வசம் ஒப்படைக்காமல் ஆக்கிரமித்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நிலத்தை மீட்ட அதிகாரிகள், அலுவலகம் மற்றும் வாயில் கதவை பூட்டி சீல் வைத்தனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்