சென்னை அண்ணா சாலையில் பேருந்தின் கூரை மீது ஏறி நின்று ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் இருவர் சிறையில் அடைக்கப்பட்டனர். மந்தைவெளியில் இருந்து பிராட்வே நோக்கி சென்ற அரசு பேருந்தின் மேற்கூரை மீது ஏறிய கல்லூரி மாணவர்கள் இருவர், பாட்டுப்பாடி, ரகளையில் ஈடுபட்டனர். அந்த மாணவர்களை பொதுமக்கள் பிடித்து திருவல்லிக்கேணி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணைக்குப்பின் இரு மாணவர்களையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.