தமிழ்நாடு

நண்பர்களை வைத்து வழிப்பறி செய்த இளைஞர் - வீடு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதால் ஆத்திரம்

சென்னையில் தன் பணத்தை வழிப்பறி செய்த‌தாக புகார் கொடுத்த இளைஞர், போலீசார் வசம் சிக்கியுள்ளார்.

தந்தி டிவி

சென்னை கண்ணகி நகரை சேர்ந்த மகேஷ் என்பவர் தரமணி ராஜீவ்காந்தி சாலையில் வந்த போது 3 பேர் தன்னை வழிமறித்து, செல்போன், ஸ்கூட்டி, தங்க சங்கிலியை பறித்து சென்றதாக புகார் செய்தார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார்,பள்ளிக்கரணையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வெங்கடேசனை பிடித்து விசாரித்தனர். அப்போது, தரமணியில் வீடு பார்த்து தருவதாக கூறி மகேஷ் தன்னிடம் இருந்து 4 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றியதாகவும் அதற்கு பழிவாங்க தன் நண்பர்களை வைத்து வழிப்பறி செய்த‌தாகவும் வெங்கடேசன் கூறியுள்ளார். இதையடுத்து, மகேஷ் கொடுத்த புகாரின் பேரில் வெங்கடேசன், சதீஷ், பாரதி ஆகியோர் மீதும், வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் மகேஷ் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், 4 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

--

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா