சென்னையில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் - பிப்.2,3-ல் விநியோகம் முதலமைச்சரின் 'தாயுமானவர் திட்டத்தின்' கீழ், சென்னையில் பிப்ரவரி மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று வழங்கப்பட உள்ளது. அதன்படி, வருகின்ற பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில், சென்னையில் உள்ள அண்ணாநகர், அடையார், திருவொற்றியூர் உள்ளிட்ட 15 மண்டலங்களில் உள்ள 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள், இந்தப் பொருட்களை நேரடியாகப் பயனாளிகளின் வீடுகளுக்கே கொண்டு சென்று விநியோகம் செய்ய உள்ளனர். இது குறித்த தகவல்கள் அனைத்து நியாயவிலைக் கடைகளின் தகவல் பலகைகளிலும் ஒட்டப்பட வேண்டும் என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.