சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவரத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவர், புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஆரோக்கியராஜிற்கு வலிப்பு மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் சிறை காவலர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆரோக்கியராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.