சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு வந்த பொதிகை விரைவு வண்டி என்ஜினில் திடீரென தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ரயிலை நிறுத்திவிட்டு, பயணிகளை அவசர அவசரமாக ரயிலை விட்டு இறக்கிய ஓட்டுனர்கள், தீ தடுப்பு இயந்திரங்களை கொண்டு தீயை அணைத்தனர். எஞ்சினில் உள்ள பின் பிரேக் பகுதியில் ஏற்பட்ட அதிக வெப்பம் காரணமாக தீ பிடித்து இருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.