தமிழ்நாடு

கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கணவன் வீட்டின் முன் பெண் தர்ணா போராட்டம்

சென்னை பூந்தமல்லி அருகே கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி அவரது வீட்டின் முன் பெண் ஒருவர் கைக் குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தந்தி டிவி

கரையான்சாவடியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி காஞ்சனா. இருவருக்கும் கீர்த்திகா என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், கணவன் மணிகண்டன், மது அருந்திவிட்டு அடித்து துன்புறுத்தி உள்ளார். கணவனுக்கு பாடம்புகட்ட நினைத்த காஞ்சனா, தாய் வீட்டுக்கு சென்றார். நீண்ட நாட்களுக்கு பிறகு கணவன் வீட்டுக்கு திரும்பிய அவரை, மணிகண்டன் மீண்டும் மது போதையில் அடித்து துன்புறுத்தியுள்ளார். வீட்டையும் பூட்டி விட்டு சாவியை எடுத்துச் சென்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த காஞ்சனா, கணவனுடன் சேர்த்து வைக்கக் கோரி, வீட்டு முன்பு அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், அந்த பெண்ணை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்