தமிழ்நாடு

கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு நீர் வந்தது : ஏரியின் நீர்மட்டம் 553 மில்லியன் கன அடியாக உயர்வு

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 553 மில்லியன் கன அடியாக உள்ளது.

தந்தி டிவி

கடந்த காலத்தில் வறட்சியால் வறண்டு போன இந்த ஏரிக்கு கடந்த 18-ஆம் தேதி பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்தது. மேலும், ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள கிருஷ்ணா நதி நீரின் வரத்தாலும் பூண்டி ஏரியில் நீர் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பூண்டி ஏரியில் நீர்வரத்து விநாடிக்கு 557 கன அடியாகவும், நீர் இருப்பு 553 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி என்பது குறிப்பிடத்தக்கது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்