தமிழ்நாடு

சென்னை-பெண்ணிற்கு பிரசவம் பார்த்த பெண் ஆய்வாளர்

சென்னையில் சாலையில் விழுந்து கிடந்த கர்ப்பிணி பெண்ணிற்கு பெண் காவல் ஆய்வாளர் பிரசவம் பார்த்த சம்பவம் அரங்கேறியது.

தந்தி டிவி

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பானுமதி. இவரது கணவர் இரவு வேலைக்கு சென்ற நிலையில், அதிகால 03:00மணிக்கு பானுமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் வலி தாங்க முடியாமல் தானே நடந்து ஆட்டோ பிடிப்பதற்காக சூளைமேடு நெடுஞ்சாலைக்கு வந்துள்ளார். ஆனால் அப்போது பனிக்குடம் உடைந்ததால் நிலை தடுமாறி பானுமதி சாலையில் கீழேவிழுந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் சித்ரா குப்பை சேகரிக்கும் மூதாட்டியும் கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவம் பார்த்தனர். ஆண் குழந்தை பிறந்த பிறகு ஆம்புலன்ஸ் வரவழைத்து பானுமதியையும் குழந்தையையும் காவல் ஆய்வாளர் அனுப்பி வைத்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்