சென்னை வடக்கு காவல் சிறார் மன்றங்களுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி அமைந்தகரையில் நடந்தது. இதில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், காவல் சிறார் மன்றங்கள் சென்னையில் மேலும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.