சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையரகம் வளாகம் முன்பு மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர பணியாணை வழங்கப்படும் என்ற அரசாணையை நிறைவேற்றுவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.