Chennai | OMR | சென்னையில் அதிர்ச்சி.. குறுக்கே வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்.. OMRல் பரபரப்பு சென்னை அடுத்த சோழிங்கநல்லூரில், அரசு மாநகர பேருந்து ஒன்று பயணிகளுடன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேடவாக்கம் இணைப்பு சாலையான செம்மொழி சாலையில் சென்ற போது, இந்த விபத்து நேர்ந்துள்ளது. மெட்ரோ பணிக்காக சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு சாலைகள் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க, அரசு பேருந்தை ஓட்டுநர் இடதுபுறம் திரும்பவே, நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த சதுப்பு நில பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இதில், ஓட்டுநர், நடத்துனர் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் லேசான காயத்துடன் மேடவாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பள்ளத்தில் விழுந்த பேருந்தை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.