அடுத்த 24 மணிநேரத்தில் பெய்ட்டி புயல் வலுப்பெறும் என்பதால், வட தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்று வீசும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.