தமிழ்நாடு

மெட்ரோ ரயிலில் 2 மணி நேர இலவச பயணம் - டிக்கெட் வழங்கும் இயந்திரம் பழுது

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக, இன்று காலை பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்தனர்.

தந்தி டிவி

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக, இன்று காலை பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்தனர். முன்னதாக, காலை 6 மணி முதல், பயணிகளுக்கு காகித வடிவிலான பயண சீட்டுகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு, பயணிகள் வருகை அதிகரித்ததால், காலை 8:15 மணி முதல் இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து, வண்ணாரப்பேட்டை, விமான நிலையம், அரசினர் தோட்டம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பழுது நீக்கும் பணி நடந்தது. அதன்பிறகு, காலை 10.30 மணி அளவில் இயந்திரங்கள் பழைய நிலைக்கு திரும்பியதால், 2 மணி நேரம் நீடித்த இலவச பயணம் முடிவுக்கு வந்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்