சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 4-ல் ஆய்வு நிறைவு சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத் திட்டத்தில் வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையம் முதல் வடபழனி வரை மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் மேற்கொண்ட 2 நாட்கள் ஆய்வு நிறைவு பெற்றுள்ளது. மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் அனந்த் மதுகர் சௌத்ரி, மற்றும் அவரது குழுவினர், 2ம் கட்டத் திட்டத்தில் 4-வது வழித்தடத்தில் அய்யப்பன்தாங்கல் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ நிலையம் வரை மொத்தம் 11 மெட்ரோ நிலையங்கள் உட்பட 8.50 கிலோமீட்டர் தூரம் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 2 நாட்களாக மின்சாரம், தண்டவாளம் மற்றும் கட்டுமான பணிகள் குறித்த பல்வேறு கட்டமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மெட்ரோ ரயிலை அதிவேகத்தில் இயக்கும் சோதனை பிப்ரவரி மாத இறுதியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.