தமிழ்நாடு

பகல் 11.30 முதல் மாலை 3.30 வரை வெளியில் நடமாட வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

வங்கக்கடலில் ஏற்பட்ட அம்பன் புயல் கடற்கரையில் இருக்கும் ஈரப்பத காற்றையும் சேர்த்து சுழற்றி சென்றதால் தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது.

தந்தி டிவி

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக திருத்தணியில் 42 புள்ளி 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருச்சியில் 41 புள்ளி 4 டிகிரி செல்சியஸும், சென்னை மீனம்பாக்கம் பகுதியில் இயல்பை காட்டிலும் 3 புள்ளி 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து, 42 புள்ளி 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியது.மதுரையில் 41 புள்ளி 2 டிகிரி செல்சியஸ் , வேலூரில் 41 டிகிரி செல்சியஸ் , கடலூரில் 40 டிகிரி செல்சியஸ் என தமிழகத்தின் பல நகரங்களில் இயல்பை காட்டிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. அடுத்து வரும் இரு தினங்களுக்கு வடமாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து கடுமையான அனல் காற்று வீச வாய்ப்பு இருப்பதால் பகல் 11.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்