தமிழ்நாடு

ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்ட கடை உரிமையாளர்கள்.. சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி

திருவல்லிக்கேணி நடுக்குப்பம் பகுதியில் வசித்து வரும் சாக்ரடீஸ் என்பவரின் மனைவி இளவரசி,

மெரினா கடற்கரை பகுதியில் நம்ம சென்னை என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு எதிரில் பிலால் என்ற பெயரில் எண்ணூரைச் சேர்ந்த முகமது ஷாயின் ஷா மற்றொரு உணவகம் நடத்தி வருகிறார். இளவரசி தனது உணவகத்தில் காம்போ ஆபர் மூலம் உணவு விற்பனை செய்து வந்தார். இதேபோல் முகமது ஷாயின் ஷாவும், காம்போ ஆபர் கொடுத்து விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த சாக்ரடீஸ், அந்த உணவகத்திற்கு சென்று கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது 2 தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சாக்ரடீஸ், முகமது ஷாயின்ஷா, துர்காதேவி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்