தமிழ்நாடு

மாஞ்சா நூல் தயாரித்தவர் குண்டர் சட்டத்தில் கைது - கண்ணாடி தூள், நூல் பறிமுதல்...

சென்னையில், மாஞ்சா நூ​ல் தயாரித்து விற்பனை செய்து வந்த நபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

தந்தி டிவி

சென்னையில், மாஞ்சா நூ​ல் தயாரித்து விற்பனை செய்து வந்த நபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். அண்மையில், கொருக்குப்பேட்டை பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில், குழந்தை ஒருவன் உயிரிழந்தான். இதைத் தொடர்ந்து, எடுக்கப்பட்ட நடவடிக்கையில், 17 பேரை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலை அடுத்து மாஞ்சா நூல் தயாரித்த வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த ஞானசேகரனை கைது செய்த போலீசாரின் விசாரணையில், மீஞ்சூர், அத்திப்பட்டு பகுதிகளில் மாஞ்சா விற்பனையை நடத்தியது தெரியவந்தது. அவரிடம் 5 கிலோ கண்ணாடித் தூள், நூல் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மாஞ்சா நூல் விற்பனையை தடுக்க ஆன்லைன் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்