தமிழ்நாடு

டேங்கர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி பயங்கர விபத்து - 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

படுகாயமடைந்த 12 பயணிகள் மருத்துவமனையில் அனுமதி

தந்தி டிவி

சென்னையிலிருந்து 40 பயணிகளுடன் மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து ஒன்று இன்று அதிகாலை உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியுடன் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இரு வாகனங்களும் முற்றிலும் எரிந்து போயின. பேருந்து, டேங்கர் லாரி ஓட்டுனர்கள் மற்றும் ஒரு பயணி உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 12 பயணிகளை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிரேன் மூலம் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து

சரிசெய்யப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ