தமிழ்நாடு

சென்னையில் நொடியில் இளைஞர் உயிரை பறித்த `போட்டோ' - பயத்தில் மக்கள்

தந்தி டிவி

மாங்காடு அடுத்த சுபஸ்ரீ நகரை சேர்ந்தவர் சீனிவாசன். தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவருக்கு திருமணமாகி குழந்தை ஒன்றுள்ள நிலையில், ஆன்-லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பெருவாரியான பணத்தை சீனிவாசன் இழந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆன்லைன் ஆப் மூலம் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்ற சீனிவாசன், பணத்தை திருப்பி செலுத்திய பின்னரும் ஆப் நிறுவனத்தினரின் நெருக்கடிக்கு ஆளானதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து, சீனிவாசனின் புகைப்படத்தை லோன் ஆப் நிறுவனத்தினர் ஆபாசமாக சித்தரித்து அவரது உறவினர்களுக்கு அனுப்பியதாக கூறப்படும் நிலையில், இதனால் மன உளைச்சலில் இருந்த சீனிவாசன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சீனிவாசனின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இதன் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்