தமிழ்நாடு

வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தை தொடும் பூண்டு விலை - மக்கள் அதிர்ச்சி

தந்தி டிவி
• சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், வெங்காயத்தை தொடர்ந்து பூண்டு விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பூண்டு, மொத்த விற்பனையில் அதிகபட்சமாக 400 ரூபாய்க்கும், புறநகர் பகுதிகளில் சில்லரை விற்பனையில் அதிகபட்சமாக 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாக 150 டன் பூண்டு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு இறக்குமதி செய்யப்படும் நிலையில், தற்போது மத்தியப்பிரதேச மாநிலத்திலிருந்து 30 டன் அளவிலான பூண்டு மட்டுமே இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. வெங்காய விலையை பொருத்தவரை, தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக, ஒரு கிலோ மொத்த விற்பனையில் 90 ரூபாய் வரையும், சில்லறை விற்பனையில் 120 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"