தமிழ்நாடு

உணவில் மயக்க மருந்து கொடுத்து திருட்டு : வீட்டில் வேலை செய்த நேபாள இளைஞன் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகை, பணம் திருடிய நேபாளத்தை சேர்ந்த பணியாளரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

சென்னை கீழ்ப்பாக்கத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகை, பணம் திருடிய நேபாளத்தை சேர்ந்த பணியாளரை போலீசார் கைது செய்தனர். சீனிவாசலு என்பவரது வீட்டில் நேபாளத்தை சேர்ந்த சுஜன் என்ற இளைஞர் 2 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், சீனிவாசலு வீட்டில் இரவு உணவு தயார் செய்து, அதில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். இதனை சாப்பிட்ட வீட்டில் இருந்த அனைவரும் மயங்கி விழுந்தனர். இதனையடுத்து வீட்டில் இருந்த 15 சவரன் நகை, 35 ஆயிரம் ரூபாய் பணத்தை சுஜன் திருடிச் சென்றார். இதுதொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போன் சிக்னல் உதவியுடன் 6 மணி நேரத்தில் சுஜனை கைது செய்தனர்.அவரிடமிருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு