தமிழ்நாடு

ஏற்றுமதி தொழில் செய்வதாக கூறி மோசடி : ஐ.டி பெண் ஊழியர் மீது புகார் - விசாரணை

ஏற்றுமதி தொழில் செய்வதாக கூறி, ஐடி ஊழியர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ஐ.டி. பெண் ஊழியர் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
பெருங்களத்தூரை சேர்ந்த சுந்தரின்சகோதரி, பிரபல தனியார் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது சகோதரி உடன் வேலை பார்க்கும் பெண் எனக் கூறி, சுமித்ரா என்பவர் அறிமுகமாகியுள்ளார். சிங்கப்பூரில் தனது கணவர் தொழிலதிபராக இருப்பதாகவும், இந்தியாவிலிருந்து தானியங்களில் ஏற்றுமதி செய்யும் தொழிலை தாங்கள் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.இதை நம்பி, சுந்தர் 8 லட்ச ரூபாய் வரை பண பரிவர்த்தனை செயலி மூலம் சுமித்ராவுக்கு அனுப்பியுள்ளார். நீண்ட நாட்களாக பணத்தை திருப்பி தராததால், சந்தேகமடைந்த சுந்தர்,சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில் சுமித்ரா தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் இதேபோன்று 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூல் செய்து ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்