தமிழ்நாடு

கள்ளக்காதலியை கொன்றுவிட்டு ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை - நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் ஆத்திரம்

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் கள்ளக்காதலியை கொன்றுவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

பள்ளிக்கரணையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சுரேஷ் தனது முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற நிலையில் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த ராணி என்பவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில்

நீண்ட நேரமாகியும் அவரது வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்ததில் சுரேஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும் அருகே ராணியின் உடல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் வேறு ஒருவருடன் ராணி தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த சுரேஷ் ராணியை கொலை செய்து விட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே