தமிழ்நாடு

கோரமுகம்.. கடுங்கோபத்தில் தமிழகம்.. சென்னையில் போலீஸ் குவிப்பு

தந்தி டிவி

தமிழக மீனவர்களை இலங்கை கடற்கரையினர் சிறை பிடிக்கும் சம்பவங்கள் தொடர்பாக தமிழகம் முழுவதும் இலங்கையை கண்டிக்கும் வகையில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவதை கண்டிக்கும் விதமாக இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க கோரி, தமிழ் தேசிய கூட்டணி

இன்று சென்னையில் பல இடங்களில் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள இலங்கை தொடர்புடைய அலுவலகங்கள், கோயில்கள், கடைகள் ஆகிய இடங்களில் போலீசார் பாதுகாப்பணியில்

ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக எழும்பூரில் உள்ள புத்தர் கோயில், அண்ணா நகரில் உள்ள சிங்கள தம்ரோ பர்னிச்சர் கடைகள் ஆகிய இடங்களில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 25க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்