தமிழ்நாடு

"சென்னை ஐ.ஐ.டி.க்கு அனுப்பியது மிகப்பெரிய தவறு" - மாணவியின் தந்தை

சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட பாத்திமா கடந்த ஒரு மாதமாக மனவேதனையுடன் காணப்பட்டதாக அவரது தந்தை லத்தீப் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட பாத்திமா கடந்த ஒரு மாதமாக மனவேதனையுடன் காணப்பட்டதாக அவரது தந்தை லத்தீப் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொள்ளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாத்திமா கடந்த ஒரு மாதமாக தாயாரிடம் பல புகார்கள் தெரிவித்து வந்துள்ளதாக கூறியுள்ளார். பாத்திமாவின் மனம் புண்படும் படி ஏதோ சம்பவங்கள் நிகழ்ந்ததை தாம் உணர முடிந்ததாக குறிப்பிட்ட லத்தீப், தேர்வில் INTERNAL மதிப்பெண்கள் மிகவும் குறைவாக ஆசிரியர்கள் வழங்கியதாகவும் கூறியுள்ளார். இது குறித்து பாத்தீமா மேல்முறையீடு செய்த போது துறைத் தலைவர் கூடுதலாக 5 மதிப்பெண்களை வழங்கலாம் என்று கூறியதாகவும், ஆனால் தற்போது இவ்வாறு நிகழ்ந்துவிட்டதாகவும் தந்தை லத்தீப் கூறியுள்ளார். சென்னை ஐஐடிக்கு படிப்பதற்காக அனுப்பியது தவறாகி விட்டதோ என தாம் எண்ணியதாகவும் தந்தை லத்தீப் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்