தமிழ்நாடு

ஐ.ஐ.டி மாணவி தற்கொலை விவகாரம் : ஐ.ஐ.டி.க்கு எதிராக பல்வேறு அமைப்பினர் புகார்

சென்னை ஐஐடியில் கேரள மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக சென்னை ஆணையர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.

தந்தி டிவி

சென்னை ஐஐடியில் கேரள மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக சென்னை ஆணையர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் தேகலான் பாகவி, கூடங்குளம் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் ஆகியோர் மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். மாணவியின் இறப்பு தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும், விசாரணையை முறையாக நடத்த வேண்டும், ஐஐடியை அரசுடைமையாக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு