தமிழ்நாடு

சென்னை : மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

சென்னை அருகே மனைவியை குத்திக் கொலை செய்த கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
சென்னை அருகே மனைவியை குத்திக் கொலை செய்த கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்தவர் கிட்டப்பன். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த சுமதி, தனது குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இன்று காலை தனது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு கணவரை சந்திக்க வந்துள்ளார் சுமதி. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் அடித்துள்ளார் கிட்டப்பன். மயங்கி விழுந்த அவரின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த கிட்டப்பன், பின்னர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். சுமதியின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் கிட்டப்பனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி