தமிழ்நாடு

சென்னை : மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

சென்னை அருகே மனைவியை குத்திக் கொலை செய்த கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
சென்னை அருகே மனைவியை குத்திக் கொலை செய்த கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்தவர் கிட்டப்பன். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த சுமதி, தனது குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இன்று காலை தனது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு கணவரை சந்திக்க வந்துள்ளார் சுமதி. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் அடித்துள்ளார் கிட்டப்பன். மயங்கி விழுந்த அவரின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த கிட்டப்பன், பின்னர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். சுமதியின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் கிட்டப்பனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை