தமிழ்நாடு

அயனாவரம் சிறுமி வழக்கு : சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை சிபிஐ க்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தந்தி டிவி
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறுமியை மிரட்டி, ஏழு மாதங்கள் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுள்14 பேர், வழக்கை சிபிஐ க்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற எந்த காரணமும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, இந்த வழக்கு தொடர்பாக அயனாவரம் மகளிர் காவல் நிலையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 300 பக்க குற்றப்பத்திரிக்கை நகல்கள், கைதான17 பேருக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு