தமிழ்நாடு

பேனர் விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல்

பேனர் விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.

தந்தி டிவி

பேனர் விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். கட்சி நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்க கூடாது என கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பேனர்கள் தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவது மட்டுமல்லாமல், பிற கட்சியினர் சட்ட விரோதமாக வைத்த பேனர்களை அகற்றக்கோரியும், உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளதாக திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை