தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை கோரி தொடரப்பட்ட வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் கற்பகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் அடங்கிய அமர்வு, நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.