தமிழ்நாடு

கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை வழக்கு : கனிமொழி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு, கனிமொழிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

கனிமொழியின் வேட்புமனுவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளதாகவும், வேட்புமனு பரிசீலனையின் போது ஆட்சேபங்கள் தெரிவித்த போது, அதை தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டதாகவும் தமிழிசை தனது மனுவில் குற்றம்சாட்டி உள்ளார். கனிமொழியின் கணவர் மற்றும் மகன் சிங்கப்பூர் பிரஜைகள் என்றும், அவர்களின் வருமான விவரங்கள் பொருந்தாது என்றும் குறிப்பிட்டிருந்ததாகவும், அதற்கு மாறாக சிங்கப்பூர் அரசு வழங்கிய குடிமக்கள் பதிவு சான்றிதழை இணைத்திருக்க வேண்டும், ஆனால் அவர் இணைக்கவில்லை எனவும், அதனால் இந்த வேட்புமனு குறைபாடானது எனவும் தமிழிசை தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். பிரச்சாரத்தின் போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கியதாகவும் தமிழிசை மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், மனுவுக்கு பதிலளிக்கும்படி, திமுக எம்.பி. கனிமொழி மற்றும் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை