தமிழ்நாடு

புதிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவி ஏற்பு : பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர்

சென்னை உயர்நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவி ஏற்றுக்கொண்டார்.

தந்தி டிவி

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழா நடந்தது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புதிய நீதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி மற்றும் நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 1985-ல் சட்டப் படிப்பை முடித்த அமரேஷ்வர் பிரதாப் சாஹி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார். சிவில் மற்றும் அரசியல் சாசன வழக்குகளில் ஆஜராகி வந்த அவர், 2005ஆம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2018 நவம்பரில் பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்