அரசு உதவி பெறாத பள்ளிகள் 40 சதவீத கல்விக் கட்டணத்தை வசூலிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முன் கட்டணமாக ஆகஸ்ட் 31க்குள் வசூலிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. மேலும் கல்விக் கட்டண நிர்ணய குழு ஆகஸ்ட்டில் இருந்து 8 மாதங்களுக்குள் பணியை முடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது