தமிழ்நாடு

கிண்டி சிறுவர் பூங்கா கட்டணம் திடீர் உயர்வு : "சிறுவர்களுக்கு ரூ.15 - பெரியவர்களுக்கு ரூ.50"

சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் பார்வையாளர்கள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் பார்வையாளர்கள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சிறுவர்களுக்கு 5 ரூபாயும், பெரியவர்களுக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுவர்களுக்கு 15 ரூபாயாகவும், பெரியவர்களுக்கு 50 ரூபாயாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர் பூங்காவில் வரக்கூடிய வருமானம் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்கு, போதுமானதாக இல்லை என்பதால், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கிண்டி சிறுவர் பூங்காவில் 50 லட்ச ரூபாய் செலவில் புலி, பெங்குயின், கங்காரு, வெள்ளை பாண்டா, அனகோண்டா, டைனோசர் உள்ளிட்ட மிருகங்களின் உருவங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்