தமிழ்நாடு

வெளிநாடுகளுக்கு நிகரான சாலை வசதிகள்...

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சென்னை விரைவில் வெளிநாட்டிற்கு நிகரான சாலை வசதிகள் பெற்று, சீர்மிகு சென்னையாக உருவாக உள்ளது.

தந்தி டிவி
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள பத்து மாநகரங்களில், பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சீர்மிகு சென்னை என்ற திட்டத்தின்படி, 500 கோடி ரூபாய் மதிப்பில் வெளி நாடுகளுக்கு நிகரான சாலை மற்றும் உள் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது. சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் 28 திட்டங்களுக்கு டெண்டர்கள் கோரப்பட்டு, வேலைகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக ஆளில்லா விமானங்கள் மூலம் புவிசார் குறியீடுகள் கொண்ட வரைபடம் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தி.நகர் போன்ற எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அகல சாலைகள், நடைபாதைகள், கார் பார்க்கிங் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்