சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் கடும் அவதிக்கு ஆளாவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டிள்ளனர். பிப்ரவரி 20 முதல் எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும், மறு சீரமைப்பு பணிகளே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கிண்டி, பல்லாவரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்துள்ளதாகவும், சிரமத்தை குறைக்கும் வகையில் கூடுதல் ரயில்கள், பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்...