தமிழ்நாடு

எழும்பூர் கண் மருத்துவமனையில் மரங்களை வெட்ட தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்ட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

தந்தி டிவி

சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்ட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. நோயாளிகளின் வசதிக்காக கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக, மருத்துவமனை வளாகத்தில் உள்ள 75 மரங்களை வெட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீபதிகள், மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்ததுடன், டிசம்பர் 2ஆம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்கும்படி எழும்பூர் கண் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறைக்கு உத்தரவிட்டனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே