தமிழ்நாடு

எழும்பூர் கண் மருத்துவமனையில் மரங்களை வெட்ட தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்ட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

தந்தி டிவி

சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்ட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. நோயாளிகளின் வசதிக்காக கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக, மருத்துவமனை வளாகத்தில் உள்ள 75 மரங்களை வெட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீபதிகள், மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்ததுடன், டிசம்பர் 2ஆம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்கும்படி எழும்பூர் கண் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறைக்கு உத்தரவிட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை