சென்னையில் 2 நாட்களில் ரூ. 60 லட்சம் ரொக்கம், போதைப்பொருட்கள் பறிமுதல் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 60 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையின் 16 தொகுதிகளிலும் தலா 3 குழுக்கள் வீதம் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை மற்றும் கண்காணிப்புக் குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் ரொக்கப் பணம் தவிர, 42 லிட்டர் மதுபானம் மற்றும் போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.