தமிழ்நாடு

கொரோனா விழிப்புணர்வு, உதவி எண்கள் சுவரொட்டி சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஒட்டப்படும் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வீடுகளில் கொரோனா பற்றிய விழிப்புணர்வுகளையும், உதவி எண்களையும் கொண்ட சுவரொட்டி ஒட்டப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

சென்னையில் நாளுக்குள் நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றின் முக்கியத்துவத்தை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா விழிப்புணர்வு மற்றும் உதவி எண்கள் அடங்கிய சுவரொட்டி, சென்னையின், அனைத்து மண்டலங்களில் உள்ள வீடுகளின் முன்பும் ஒட்டுவதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதில் மண்டல வாரியாக அவசரகால உதவி எண்கள் மற்றும் ரிப்பன் மாளிகையின் கட்டுப்பாட்டு அறை உதவி எண்களும் இடம் பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்