தமிழ்நாடு

சென்னையில் 27 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனோ

சென்னையில் தனியார் மருத்துவமனையில் 27 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கடந்த மூன்றாம் தேதி வரை மருத்துவமனையில் பணியாற்றிய இந்த பெண் மருத்துவருக்கு, கொரோனோ உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண் மருத்துவரின் தந்தைக்கு ஏற்கனவே கடந்த நான்காம் தேதி கொரோனோ இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை அமைந்தகரையில் உள்ள அவரது வீடு மற்றும் மருத்துவர் பணியாற்றிய மருத்துவமனையில், சென்னை மாநகராட்சி சார்பில் சுகாதாரத்துறையினர் கிருமி நாசினி அடித்து வருகின்றனர். மருத்துவர் பணியாற்றிய மருத்துவமனைக்கு சீல் வைக்கவும், அங்கிருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனோ தொற்று இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யவும், முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை