தமிழ்நாடு

"காவல் உதவி ஆய்வாளருடன் மனைவிக்கு தொடர்பு" - மனைவி மீது கணவன் காவல் ஆணையரிடம் புகார்

காவல் உதவி ஆய்வாளருடன் கூட்டு சேர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் சொத்தை அபகரிப்பதாக மனைவி மீது கணவன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தந்தி டிவி
சென்னை கேகே நகரை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர், காவல் ஆணையரிடம் அளித்த புகார் மனுவில், தாம் சவுதி அரேபியாவில் பணியாற்றி, கடந்த 2019 மே மாதம் வீட்டுக்கு திரும்பியதாக கூறியுள்ளார். இந்த நிலையில் தனது மனைவிக்கும் திருநின்றவூர் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும் அதை பலமுறை தட்டி கேட்பதற்கு காவல் உதவி ஆய்வாளர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பூங்கா ஒன்றில் தனது மனைவியும் உதவி ஆய்வாளர் ராஜேஷ் என்பவரும் ஒன்றாக சந்தித்துக் கொண்ட போது அவர்களை பின் தொடர்ந்து புகைப்படம் எடுத்ததாகவும் இதனை பார்த்த உதவி ஆய்வாளர் கடுமையாக தாக்கியதாகவும், எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை